மட்டக்களப்பில் சஜித் அணியினரால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம்
மட்டக்களப்பு (Batticaloa) மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 20 இலட்சம் உறுப்பினர்களை அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வேலைத்திட்டமானது மண்முனை வடக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJP) பிரதான அமைப்பாளர் நவரத்தினராஜா ரகுநாதன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பிரச்சார செயலாளர் அலுவலகத்தில் இன்று (15.06.2024) நடைபெற்றுள்ளது.
கையேடுகள் வழங்கி வைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோமசுந்தரம் கணேசமூர்த்தியின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கட்சியின் மாவட்ட முகாமையாளர் கணபதி பிள்ளை ஸ்ரீஷ்குமார் மற்றும் மாவட்ட பிரசார செயலாளர் வெற்றிவேல் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டு தமது கட்சியின் ஆதரவாளர்களுக்கு அங்கத்துவ படிவத்தை வழங்கி வைத்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அவர்களது சுய விவரங்கள் பதியப்பட்டு கட்சியின் அங்கத்துவ அட்டை வழங்கி வைக்கப்பட்டதுடன் எதிர்கால செயல் திட்டங்கள் சம்பந்தமான கையேடுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
