ஒமிக்ரோன் அச்சத்தால் முழுக்குடும்பத்தையும் கொலை செய்த பேராசிரியர்!
ஒமிக்ரோன் கோவிட் வைரஸ் மீதான பயம் காரணமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளை ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் மாறுபாடு இந்தியா உட்பட பல நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது.இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் பரவலைக் கட்டுப்படுத்த விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண் பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில், தடயவியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்த சுஷில் சிங் (வயது 55) என்பவர் தனது மனைவி சந்திரபிரபா (வயது 50), மகன் ஷிகார் சிங் (வயது 21), மகள் குஷி சிங் (வயது 16) ஆகியோரை கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
கொலை செய்து தப்பியோடுவதற்கு முன்பு, இது குறித்து தனது சகோதரருக்கு பேராசிரியர் குறுந்தகவல் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளதாகவும்,அதில் ‘ஒமிக்ரோன் மாறுபாட்டில் இருந்து யாரும் காப்பாற்றப்படமாட்டார்கள்’. எனவே அனைவரையும் விடுவிக்கின்றேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சகோதரரின் பூட்டி இருந்த வீட்டை உடைத்து திறந்து பார்த்த போது தனது சகோதரரின் மனைவி மற்றும் குழந்தைகள் சடலமாக கிடந்துள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரின் வீட்டிலிருந்து டைரியொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.அதில், தனது குடும்பத்தினரை கொலை செய்தது குறித்தும், ஒமிக்ரோன் மாறுபாட்டைப் பற்றியும் அவர் எழுதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘இப்போது, இறந்த உடல்களை எண்ணுவது தேவையில்லை’ என்றும், கொரோனா வைரஸ் அனைவரையும் கொல்லும்’ என்றும் அவர் எழுதி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தினை தொடர்ந்து தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

குருபகவானின் நேரடி அருள்.., அடுத்த 7 மாதத்திற்கு அதிர்ஷ்ட யோகத்தில் நனையும் ராசியினர்கள் இவர்களா? Manithan

குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு என்ன சொல்ல விரும்புறீங்க? ஆங்கிலத்தில் பதிலளித்த பேரறிவாளன் வீடியோ News Lankasri

விஜய், அஜித் ஹிட் கொடுக்க முடியாமல் தவித்த இடத்தில், சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் படைத்த சாதனை.. Cineulagam

இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது... கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு? Manithan

இரு நாடுகளில் நிரந்திர குடியுரிமை! மோசடி செய்த பல கோடியுடன் சொகுசாக வாழ்ந்த தமிழ் தம்பதி.. வெளிவரும் பகீர் தகவல் News Lankasri

இலங்கை மக்களுக்கு உதவ தேநீர் மொய் விருந்து நடத்தும் நபர்! யார் அவர்? குவியும் பாராட்டுகள் News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada
20 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022