முல்லைத்தீவு விவசாயிகளின் பிரச்சினையை கேட்டறிந்து கொண்ட பிரதி அமைச்சர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய அமைப்புக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ண கேட்டறிந்து கொண்டார்.
இந்தக் கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(04) நடைபெற்றது.
இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர்அ.உமாமகேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.
காணி பிரச்சினை
இந்த கலந்துரையாடலில் வனவள திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணி பிரச்சினை தொடர்பிலும், வன விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புக்கள், குளங்கள் கால்வாய்கள் புனரமைப்பு, பாதைகள் நிர்மாணிப்பின் தேவைகள் தொடர்பிலும், காணி விடுவித்தல், நவீன விவசாயமுறை, தானிய உற்பத்தி, சந்தைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளல், மேச்சல்தரையின் தேவை, நெல் கொள்வனவு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.ஜெயக்காந்(காணி) , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், மாவட்ட வனவள அதிகாரி, விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், எனப் பலரும் கலந்துகொண்டனர்.



தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan