முல்லைத்தீவு விவசாயிகளின் பிரச்சினையை கேட்டறிந்து கொண்ட பிரதி அமைச்சர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய அமைப்புக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ண கேட்டறிந்து கொண்டார்.
இந்தக் கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(04) நடைபெற்றது.
இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர்அ.உமாமகேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.
காணி பிரச்சினை
இந்த கலந்துரையாடலில் வனவள திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணி பிரச்சினை தொடர்பிலும், வன விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புக்கள், குளங்கள் கால்வாய்கள் புனரமைப்பு, பாதைகள் நிர்மாணிப்பின் தேவைகள் தொடர்பிலும், காணி விடுவித்தல், நவீன விவசாயமுறை, தானிய உற்பத்தி, சந்தைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளல், மேச்சல்தரையின் தேவை, நெல் கொள்வனவு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.ஜெயக்காந்(காணி) , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், மாவட்ட வனவள அதிகாரி, விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், எனப் பலரும் கலந்துகொண்டனர்.



மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam