மதுபானசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளமையினால் பாடசாலைகளை திறப்பதில் சிக்கல்
மது விற்பனையகங்களை மீண்டும் திறக்கும் முடிவை எதிர்த்து பல மருத்துவ தொழில் அமைப்புகள், தங்கள் அதிருப்தியை எழுப்பியுள்ளன.
இந்த முடிவின் மூலம் கோவிட் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக குறித்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் மது விற்பனையகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தவுடன், மக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளை புறக்கணித்து மதுபானங்களுக்காக அதிக அளவில் திரண்டனர்.
இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பத்மா குணரத்ன,
குறிப்பிட்ட முடிவு நாடு இப்போது செல்லும் வழியை மோசமாக பாதிக்கும்.அத்துடன் இது பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் மேலும் தாமதத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருத்துவ வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ, ஒட்டுமொத்த தேசத்தின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்காமல், நுகர்வோர் விரும்பியதை கொள்வனவு செய்வதற்கான பாதுகாப்பான பொறிமுறையை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர், பிரசாத் கொலம்பகே, நாடு கொரோனா தொற்று மற்றும் இறப்புகளில் கீழ்நோக்கிய போக்கை சந்தித்து வரும் இந்த முக்கியமான தருணத்தில் மது விற்பனையகங்களை மீண்டும் திறப்பது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.