QR முறை காரணமாக வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்
எரிபொருள் வழங்குவதற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்திய QR முறை காரணமாக வாகன இறக்குமதியாளர்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ் தெரிவித்துள்ளார்.
இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,
போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வாகனங்களுக்கு எரிபொருளை பெறுவதில் சிக்கல்
இந்த முறை மூலம் வாகனங்களை இறக்குமதி செய்யும் போது வாகன இறக்குமதியாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருளைப் பெறுவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகவும், எனவே இதற்காக சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

வாகன இறக்குமதியின் போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வாகனங்கள் வருவதாகவும், ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்புக்கு வாகனங்களை கொண்டு வர முடியாததால் இந்த சிக்கலை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்கபட்டியுள்ளார்.
இது தொடர்பாக சில ஏற்பாடுகளை வகுக்க அரசாங்கத்துடன் கலந்துரையாட வாகன இறக்குமதியாளர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாதத்திற்கு 100-150 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும்,இந்த வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க சிறப்பு QR அமைப்பு அல்லது எரிபொருள் கோட்டாவை உருவாக்குவது முக்கியம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி! இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை