யாழில் தனியார் வகுப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க முயற்சிகளை மேற்கொள்ளும் யாழ். மாவட்ட செயலாளர்
யாழ். மாவட்டத்தில் இயங்கும் தனியார் வகுப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பெட்டகம் நிழலுருக் கலைக்கூடம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற முப்பெருந் தமிழ்விழா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கலைச் செயற்பாடுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்கள் தற்போது கைத்தொலைபேசிக்குள் மூழ்கி இருக்கின்றார்கள். அதிலிருந்து மாணவர்களை விடுபடவைக்க கலைச் செயற்பாடுகளுக்குள் ஈடுபடுத்த வேண்டும்.
வாரத்தில் ஒரு நாளாவது மாணவர்களைக் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட இடமளிக்க வேண்டும்.
வாரத்தில் ஒருநாள் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார்
வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதே என்னுடைய
அடுத்த முயற்சி என தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 9 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri
