வவுனியாவில் 24 வருடங்களின் பின்னர் தனியார் பேருந்து உரிமையாளர் சங்க அலுவலகம் திறப்பு (PHOTOS)
வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் புதிய அலுவலகம் இன்று (5) திறந்து வைக்கப்பட்டது.
கடந்த 24 வருடங்களாக தனியார் இடங்களில் செயற்பட்டு வந்த தனியார் பேருந்து உரிமையாளர் சங்க அலுவலகம் இன்று திருநாவற்குளத்தில் சுமார் 82 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடம் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமனால் திறந்து வைக்கப்பட்டது.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் எஸ். ராஜேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவநாதன் கிசோர், வவுனியா அரசாங்க அதிபர், அரசியல் பிரமுகர்கள், பேரூந்து உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.