தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு
தனியார் பேருந்து ஊழியர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்காவிட்டால், நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு நீக்கப்பட்டாலும் பேருந்துகளை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக பேருந்துகள் இயக்கப்படாததால், சுமார் 50000 பேருந்து ஊழியர்களும், 11000 பேருந்து உரிமையாளர்களும் எந்த வருமானமும் இன்றி மிகவும் மோசமான நிலைகுத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்விளைவாக, அவர்களின் குடும்பத்தினர் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அரசு இது குறித்து கவனம் செலுத்தி பஸ் ஊழியர்களுக்கு நிவாரணப் பொதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் ஊரடங்கு நீங்கிய பின்னர் பேருந்துகள் இயங்காது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam