யாழில் தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவமானது யாழ். பருத்தித்துறை பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தில் இன்று (10.01.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
முகமூடி அணிந்து உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பருத்தித்துறையிலிருந்து கட்டைக்காடு நோக்கிச்சென்ற தனியார் பேருந்தின் உரிமையாளரும் சாரதியுமான தேவகுமார்
என்பவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri