யாழில் தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவமானது யாழ். பருத்தித்துறை பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தில் இன்று (10.01.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
முகமூடி அணிந்து உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பருத்தித்துறையிலிருந்து கட்டைக்காடு நோக்கிச்சென்ற தனியார் பேருந்தின் உரிமையாளரும் சாரதியுமான தேவகுமார்
என்பவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 1 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri