தனி ஒருவராக நின்று இரண்டு சிறை அதிகாரிகளை தாக்கி காயங்களை ஏற்படுத்திய கைதி
கொலைக் குற்றச்சாட்டின் பேரில் தும்பர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர், மற்றுமொரு வழக்கு தொடர்பாக, அவரை மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களைத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
காயமடைந்த அதிகாரிகள் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த பாதுகாப்பு
தும்பறை சிறைச்சாலையில் இருந்து மஹியங்கனை வீதியூடாக மட்டக்களப்புக்குக் கொண்டு செல்லப்பட்ட கைதியே, சிறைச்சாலை அதிகாரி மற்றும் சிறைக்காவலர் ஆகியோரை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து சிறைச்சாலை பேருந்து தும்பறை சிறைச்சாலைக்கு திரும்பியதுடன், அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்
அதேநேரம் கைதி பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
