பிக்குகள், ஏனைய மதத் தலைவர்களுக்கு தடுப்பூசி விநியோகத்தில் முன்னுரிமை வழங்குக – சஜித்
பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய மதத்தலைவர்களுக்கு கோவிட் தடுப்பூசி விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதனை தவிர கோவிட்டை கட்டுப்படுத்த வேறு மாற்று வழிகள் கிடையாது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
எனவே கிரமமான முறையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடுப்பூசி ஏற்றும் நடைமுறையில் முன்னுரிமை அடிப்படை பின்பற்றப்படாமையினால் ஒட்டுமொத்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையும் குழம்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகளில் கடுயைமான அரசியல் தலையீடு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெத்தேகம சமித தேரர் உள்ளிட்ட பல பௌத்த பிக்குகள் கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே பௌத்த மதத் தலைவர்கள், ஏனைய மதத் தலைவர்கள் உள்ளிட்ட மதகுருமாருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.


அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
