மீண்டும் போராட்டத்தில் ஈடுபடும் அதிபர்கள்!
பாடசாலை அதிபர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை நாளைய தினம் முன்னெடுக்க உள்ளதாக அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சம்பள முரண்பாடு குறித்த சுற்று நிருபத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் உரிய பதில் எதுவும் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
அடையாள போராட்டத்திற்கு நாளை உரிய பதில் கிடைக்காவிட்டால், எதிர்வரும் 3ம் திகதி பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க நேரிடும் என இலங்கை ஆசிரியர் ஒன்றியத்தின் செயலாளர் பியசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான அதிபர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடு களைவது தொடர்பில் சரியான தீர்வுகள் இன்னும் கிடைக்கவில்லை என அதிபர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam