மீண்டும் போராட்டத்தில் ஈடுபடும் அதிபர்கள்!
பாடசாலை அதிபர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை நாளைய தினம் முன்னெடுக்க உள்ளதாக அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சம்பள முரண்பாடு குறித்த சுற்று நிருபத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் உரிய பதில் எதுவும் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
அடையாள போராட்டத்திற்கு நாளை உரிய பதில் கிடைக்காவிட்டால், எதிர்வரும் 3ம் திகதி பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க நேரிடும் என இலங்கை ஆசிரியர் ஒன்றியத்தின் செயலாளர் பியசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான அதிபர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடு களைவது தொடர்பில் சரியான தீர்வுகள் இன்னும் கிடைக்கவில்லை என அதிபர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
