தனக்கு சார்பாக மாணவர்களிடமிருந்து கையொப்பம் திரட்டிய அதிபர்!
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட உயர்தர பாடசாலை ஒன்றின் அதிபர் தனக்கு சார்பாக மாணவர்களிடமிருந்து கையொப்பங்களை பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் சிவனருள் ராஜா தெரிவித்துள்ளார்.
ஆளுமையற்ற அதிபர்
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட உயர்தர பாடசாலையொன்றின் ஆளுமையற்ற அதிபரை இடம் மாற்றுமாறு பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பொது அமைப்புகள் இணைந்து மாகாண கல்வி அமைச்சு, அரசியல் பிரதிநிதிகள் மற்றும் வலயக்கல்வி திணைக்களம் ஆகியவற்றுக்கு கடந்த வாரம் மனுக்களை வழங்கியிருந்தனர்.
கையொப்பம் திரட்டல்
இதனையடுத்து குறித்த பாடசாலை அதிபர் நேற்றைய தினம் (20-09-2022) பாடசாலையிலுள்ள தரம் 06 முதல் 12 வரையான மாணவர்களிடம் கையொப்பம் திரட்டியுள்ளார்.
இந்நிலையில் குறிப்பிட்ட சில மாணவர்கள் கையொப்பங்களை இட்டிருந்தாலும் அதிகளவான மாணவர்கள் இதனை எதிர்த்துள்ளதுடன் குறித்த விடயம் தொடர்பில் பெற்றோர்களிடம் முறையிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் குறித்த அதிபரை தொடர்பு கொள்ள முற்பட்டபோதும் அவருடன் தொடர்பை ஏற்படுத்த முடியாது போயுள்ளது.
இதனையடுத்து அதிபர் தனக்கு சார்பாக
மாணவர்களிடமிருந்து கையொப்பங்களை பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணை
மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர்
தெரிவித்துள்ளார்.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
