சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சு பதவிகள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்
எதிரணியில் பலர் சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முன்வந்திருப்பது மட்டுமின்றி அமைச்சு பதவிகளையும் பொறுப்பேற்க தயாராகவுள்ளனர். அதில் தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் ஊடக சந்திப்பொன்றில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘’தம் இனம் சார்ந்த மக்களின் நலன் கருதி தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
சர்வகட்சி அரசாங்கத்தில் திறமைகளின் அடிப்படையில் அமைச்சு பொறுப்புகள் |
சர்வகட்சி அரசாங்கம்
சர்வகட்சி வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டவுடன் சர்வகட்சி அமைச்சரவையும் நியமிக்கப்படும்.
ஆளும் கட்சி, எதிர் கட்சி என்று வேறுபாடின்றி மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஓரணியில் சங்கமித்து சர்வகட்சி அரசாங்கதை நிறுவ வேண்டும்.
பொருளாதார நெருக்கடி
அப்போதுதான் பொருளாதார நெருக்கடியிலிருந்து எமது நாட்டை மிக விரைவாக மீட்டெடுக்க முடியும்.
கட்சி அரசியல் செய்து ஆட்சி நடத்தினால் அதனால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை. சர்வதேச நாடுகளும் எமக்கு உதவி புரிய முன்வராது.
எனவே, கட்சி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டு மக்களுக்கான பலமான சர்வகட்சி அரசை நாம் ஒன்றிணைந்து நிறுவ வேண்டும்’’ என கூறியுள்ளார்.