மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை சடுதியாக குறைவு
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறி மற்றும் மீன்களின் விலைகளில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மரக்கறிகளின் விலைகள் கிட்டத்தட்ட சுமார் 50 வீதத்தால் குறைந்துள்ளதாக மனிங் பொது வர்த்தக நிலையத்தின் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மீன்களின் விலையும் குறைவு

விவசாயிகளுக்கு எரிபொருள் கிடைப்பதால், கடைக்கு வரும் காய்கறிகளின் கையிருப்பு அதிகரித்ததே இதற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, பேலியகொட மீன் சந்தையிலும் மீன்களின் விலை சடுதியாக குறைந்துள்ளதாக வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் குறைவடைந்துள்ளதாகவும், எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக கிராமங்களுக்கு அவற்றை அனுப்பி வைக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri