மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் யாருக்கு இலாபம்?
மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் இடைத் தரகர்களே இலாபத்தை பெறுவதாக சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மரக்கறிகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் கொழும்பு இன்று கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஒரு வர்த்தக நிலையத்தில் கரட் ஒரு கிலோகிராம் 300 ரூபாவாகவும், மற்றுமொரு வர்த்தக நிலையத்தில் 250 ரூபாவாகவும், பிறிதொரு இடத்தில் ஒரு கிலோகிராம் மரக்கறி 150 ரூபாவாக உள்ளது.
இது எவ்வாறு நடக்கிறது?
இந்தப் பணம் அரசாங்கத்துக்குச் செல்லாது. எனவே, இது தொடர்பில் ஒரு கட்டுப்பாட்டுக்கு வர வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.