தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பு - காரணத்தை வெளியிட்ட அதிகாரி
இலங்கையில் இந்த வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 60,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக தேசிய இரத்தினக்கல், ஆபரணங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கையால் கடந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 15,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சபையின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.
ஒரு வார காலப்பகுதியில் மட்டும் தங்கத்தின் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்கத்தின் விலை
இந்த வருடத்தின் 4 மாதங்களில் 60000 ரூபாய் வரை தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கு பிரதான காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தங்கத்தின் கோரிக்கை அதிகரித்துள்ளமையினால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.
மத்திய வங்கி
இதேவேளை, இந்த ஆண்டு இறுதிக்குள் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 4,000 அமெரிக்க டொலர்களாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறைய வேண்டுமெனில் நாட்டின் மத்திய வங்கி தங்க இருப்புக்களை வெளியிட வேண்டும் என உதவி பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
