அட்டை சவப்பெட்டியின் விலை குறித்து வெளியாகியுள்ள தகவல்!
தெஹிவளை-கல்கிஸ்ஸை மாநகர சபையால், தயாரிக்கப்பட்ட, "அட்டை" சவப்பெட்டிகளுக்கான, முதல் கட்டளை கிடைத்துள்ளதாக கல்கிசை மாநகர சபை உறுப்பினர் பிரியந்த சஹபந்து தெரிவித்துள்ளார்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அட்டைப் பெட்டியால் செய்யப்பட்ட சவப்பெட்டிகளை தயாரிக்கும் திட்டத்தை, தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகர சபை ஆரம்பித்துள்ளது.
இந்தநிலையில், குறித்த சவப்பெட்டிகளுக்கு வியட்நாமில் இருந்து கொள்வனவு கட்டளை கிடைத்துள்ளது. இதன்படி 1,000 அட்டை சவப்பெட்டிகளுக்கு, கொள்வனவு கட்டளை கிடைத்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமைக்குள், இந்த பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
வழக்கமான மர சவப்பெட்டிகளை கொள்வனவு செய்ய முடியாத மக்களுக்கு நிவாரணமாக, இந்த அட்டை சவப்பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை வெறும் 5000 ரூபா விலையில் விற்பனை செய்யப்படுகிறது

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
