தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மறுபெயரேயாகும்! ஜனாதிபதி சட்டத்தரணி

Human Rights Commission Of Sri Lanka Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka SL Protest
By Diasa Sep 14, 2022 08:12 AM GMT
Report

போராட்டங்களை, ஊர்வலங்களை நடத்தினாலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பெயர் மாற்றமடையுமே தவிர பயங்கரவாதத் தடைச் சட்டமோ அதன் கொடூரமான உள்ளடக்கங்களோ மாறப் போவதில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும்,

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருப்பது குறித்து பல்வேறு தரப்புக்களும் கண்டனம் தெரிவிப்பதையடுத்து ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு பதிலாக விரிவான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இலங்கை கொண்டு வருமென வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் புதிய சட்டம்

தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மறுபெயரேயாகும்! ஜனாதிபதி சட்டத்தரணி | Prevention Of Terrorism Act In Sri Lanka

இலங்கை அரசாங்கத்தினால் 1947ம் ஆண்டு 25ம் இலக்க சட்டமாக கொண்டு வரப்பட்ட பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் பொழுது பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை முற்றாக நீக்காமல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பெயரை மாற்றி தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் புதிய சட்டம் ஒன்று கொண்டுவர உத்தேசித்துள்ளமை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மறுபெயராகுமே தவிர வேறு எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென கடந்த நல்லாட்சிக் காலத்தில் ஜெனீவா வரைக்கும் கொண்டு செல்லப்பட்ட அழுத்தம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும் நிலைப்பாட்டுக்கு 2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சியென அழைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு ஏற்பட்டதையடுத்து, நல்லாட்சிக் காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாகக் வாக்குறுதியளித்த அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பெயரை பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் என பெயர் மாற்றப்பட்டு சட்ட வரைவுகள் நிறைவடைந்திருந்த நிலையில் 2020ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தை விட மிக மிக மோசமானதும், கொடூரமானதுமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு கிடப்பில் போடப்பட்டது.

வழங்கப்பட்ட வாக்குறுதி

தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மறுபெயரேயாகும்! ஜனாதிபதி சட்டத்தரணி | Prevention Of Terrorism Act In Sri Lanka

இப்போது மீண்டும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக வாக்குறுதியளித்து பயங்கரவாதத் தடைச்சட்டம் என்ற பெயரை மட்டும் மாற்றிவிட்டு தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வருவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இச்சட்டம் நிச்சயமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விட பன்மடங்கு மோசமானதாக அமையும் சாத்தியகூறுகள் காணப்படுகின்றன.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்த நல்லாட்சிக் காலத்தில் நீதி அமைச்சராகயிருந்த விஜயதாச ராஜபக்சவே துரதிஸ்டவசமாக இந்த ஆட்சியிலும் நீதி அமைச்சராவார்.

மக்கள் குரல் கொடுக்க முடியாதபடி பலமான அரண்

தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மறுபெயரேயாகும்! ஜனாதிபதி சட்டத்தரணி | Prevention Of Terrorism Act In Sri Lanka

இதனால் நீதி கேள்விக்குறியே? தேசிய பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வருவதன் நோக்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கிவிட்டதாக சர்வதேசத்தை ஏமாற்றும் அதேநேரத்தில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க முடியாதபடி பாதுகாப்புமிக்க பலமான அரணை நிறுவிக் கொண்டதாகவே அமையும்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென எத்தனை போராட்டங்களை ஊர்வலங்களை வடக்கிலிருந்து தெற்குவரை நடத்தினாலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பெயர் மாற்றமடையுமே தவிர பயங்கரவாதத் தடைச்சட்டமோ அதன் கொடூரமான உள்ளடக்கங்களோ மாறப்போவதில்லை.

மொத்தத்தில் சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த மாதிரியான நிலைதான் தோன்றுமே தவிர பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாகவே நீக்கப்பட போவதில்லை என்பதே யதார்த்தம் என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US