மன்னாரில் நீரில் மூழ்கிய கிராமங்கள் (Photos)
மன்னாரில் கொட்டி தீர்த்த கனமழையினால் பாலியாறு பெருக்கெடுத்துள்ளது.
கட்டுக்கரை குளத்தின் நீர்மட்டமானது வான் பாய ஆரம்பித்துள்ளதன் காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பாலியாறு, சிப்பியாறு, முழுவதும் நீர் நிறைந்து வீதிக்கு மேலாக பாய்ந்து வருவதுடன் அருகில் உள்ள கிராமங்கள் முழுவதும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
முழுவதும் சூழ்ந்த வெள்ள நீர்
மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆட்காட்டிவெளி மற்றும் மாந்தை கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள வயல் நிலங்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்தாக கூறப்படுகிறது.
இதேவேளை மன்னார் பிரதேச செயலக பிரிவில் கடும் மழை காரணமாக ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், சாந்திபுரம் போன்ற கிராமங்களும் தீவுக்கு வெளியில் தேத்தாவட,தேவன் பிட்டி, மூன்றாம் பிட்டி போன்ற கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவும் பட்சத்தில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்பது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
