ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின்! நாமல் காட்டம்..
தமிழகத்தில் முகாம்களில் வசிக்கும் 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வைத்த கோரிக்கை எதிர்வரும் தமிழக மாநில தேர்தலை நோக்காக கொண்டதா என நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பில் மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் தனது சமூக ஊடக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
உள்நோக்கத்துடனான கோரிக்கை
தமிழக முதல்வர் பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்த கோரிக்கையை வரவேற்கிறோம்.ஆனால் இந்த கோரிக்கை உண்மையான மனிதாபிமான அக்கறை கொண்டு முன்வைக்கப்பட்டதா? ஏனெனில் கடந்த காலங்களிலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளன.

30 ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டு போரின் முடிவிற்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்தில், தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் வசித்த இலங்கையர்களின் பாதுகாப்பான மற்றும் சுயமான மீள் குடியேற்றத்தை எங்கள் அரசு தொடர்ந்து எளிதாக்கியது.
கடினமான சூழ்நிலைகளிலும், அவர்கள் தாய்நாட்டில் மரியாதையுடனான வாழ்வை மீள அமைத்துக்கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மீள திரும்ப விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்
இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் இருந்து சுயமாக திரும்பிச் செல்ல விரும்புகிறவர்களுக்கு கதவடைப்பு மற்றும் தடைகள் இருப்பதாக வரும் தகவல்கள் கவலைக்கிடமாக உள்ளன.
இலங்கையில் மீளக் குடியேற விரும்புகிறவர்களின் கவலைகளை இலங்கை அரசு கவனமாக ஆய்வு செய்து, தேவையற்ற தடைகளின்றி அவர்களின் மீள்குடியேற்றத்தை எளிதாக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
The plea by Tamil Nadu CM Thiru @mkstalin to Indian PM Hon. @narendramodi seeking Indian citizenship or long-term visas for 89,000 Sri Lankans living in southern India is indeed a welcome move for them.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) February 16, 2026
It offers hope to thousands of those Sri Lankan Tamils who have been living…
இலங்கையர்கள் இந்தியாவில் அகதி முகாம்களில் தொடர்ந்து துயரப்பட தேவையில்லை. அவர்கள் தாய்நாட்டிற்கு திரும்பி, இலங்கையில் வாழலாம்.
இந்த 89,000 இலங்கையர்களும் எங்கள் மக்களே,அவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் மரியாதைக்காக நாங்கள் பொறுப்பேற்கின்றோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam