கோட்டாபய உருவாக்கிய எவன்கார்ட் நிறுவனத்தில் ரூ. 780 மில்லியன் ரூபா மோசடி...
எவன்கார்ட் மெரிடைம் பிரைவட் நிறுவனம் 2014-2015 ஆம் ஆண்டில் கடற்படைக்கு செலுத்த வேண்டிய ரூ. 780 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ளதாக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர நேற்று (17.02.2026) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எவன்கார்ட் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை
ரக்னா லங்கா மற்றும் அவன்ட் கார்ட் கூட்டுத் திட்டம் 2021-2025 ஆம் ஆண்டில் 14.12 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளது. ஆனால் இந்தத் தொகையை செலுத்தத் தவறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பரிந்துரைகளின் பேரில் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீண்டும் கடற்படைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, ஆகஸ்ட் 10, 2025 முதல் இந்த மாதம் 10 ஆம் திகதி வரை, அந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கடற்படை அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நிதியத்துக்கு 598,250 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.