இலங்கைக்கு கடும் அழுத்தம்! - ஐரோப்பிய ஒன்றியத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கை அதன் மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்கவும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கான வரிச் சலுகையை பெற்றுக்கொள்ளவும் ஒரு குறுகிய கால வரையறையுடன் கூடிய தெளிவான கட்டமைப்பை பகிரங்கமாக உருவாக்குமாறு மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் மோசமடைந்து வருவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கொடுத்து வரும் அழுத்தம் காரணமாக பல்வேறு சட்டங்களை திருத்துவதாக இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது.
ஆனால் இந்த அறிவிப்புகள் மிகவும் நம்பகதன்மையற்றவை. இலங்கை தனது வர்த்தகத்திற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின வரிச் சலுகைகளை பெற வேண்டுமாயின் வாக்குறுதிகளுக்கு மட்டுப்படுத்தப்படாத நிரந்தர சீர்திருத்தங்கள் தேவை என்பதை ஐரோப்பிய ஒன்றியம் தெளிவுபடுத்த வேண்டும்.
"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் கீழ், இலங்கை அரசாங்கம் சிவில் சமூகத்தை ஒடுக்கி, எதிர்ப்பாளர்களின் குரல்களை அடக்கி, சிறுபான்மையினரை குறிவைத்தது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மேலும் துஷ்பிரயோகம் செய்தது வருகிறது என்பதுடன் போர்க் குற்றங்களுக்கான பொறுப்பு கூறலை நிறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசு மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கான தண்டனை வழங்காது போனால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தெளிவுப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐரோப்பிய ஒன்றிய பணிப்பாளர் லோட் லீச் (Lord Leach) தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியம் GSP + திட்டத்தில் இலங்கையை மீண்டும் இணைத்துக்கொண்டது. இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு சுங்க வரியற்ற ஏற்றுமதி அனுமதியை வழங்கியது.
இதற்காக மனித உரிமைகள் உடன்படிக்கைகள் உட்பட 27 சர்வதேச மாநாடுகளின் இணக்கங்களுக்கு ஏற்ப இலங்கை ஆட்சி அதிகாரத்தை முன்னெடுக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் முந்தைய செயற்பாடுகள் தொடர்பான மதிப்பீடுகளை செய்தபோது இலங்கை அரசு அந்த கடமைகளையும் இணக்கங்களையும் மீறி இருந்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ் அரசாங்கத்தின் உரிமைகள் பற்றிய அறிக்கைகள் மோசமடைந்து வருகிறன்றன.
போதிய முன்னேற்றம் இல்லை என்றால் இலங்கை GSP + வரிச் சலுகையில் இருந்து நீக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தில் கடந்த ஜூன் மாதம் ஒரு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
ஜூன் மாதம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, போர்க் குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட 16 கைதிகள், தண்டனைக் காலம் முடிந்து அல்லது முடிவடையும் தருவாயில் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.
ஏனைய கைதிகளின் விடுதலையை பரிந்துரை செய்ய ஒரு ஆலோசனை குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற தற்காலிக நடவடிக்கைகள் தொடர்ச்சியான வன்முறைகளுக்கு எதிராக நம்பத்தன்மையான சட்டப் பாதுகாப்பை வழங்காது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
இலங்கை அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சமர்பிக்க போர்க்குற்றச் சட்டத்தில் தற்போது திருத்தங்களை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த திருத்தங்களின் நம்பகத்தன்மையில் அந்த அளவுக்கு நம்பிக்கையில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அதிகரித்து வரும் மனித உரிமை நெருக்கடியை தீர்க்க ஐரோப்பிய ஒன்றியம் GSP + ஐ பயன்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச மனித உரிமைகள் தொடர்பில் வழங்கியுள்ள விதிமுறைகளுக்கு அமைய இலங்கை கடுமையான மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதிக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆராய வேண்டும் எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது.