ஈழத்தமிழர்களின் வலிகளை சுமந்த பிரம்மாண்ட திரைப்படம்
இறுதி யுத்தத்தின் பின்னதாக இன்னமும் வாழ்வுக்காக நாளாந்தம் போராடும் ஈழத்தமிழர்களின் வலிகளை சுமந்து வரும் ஆறாம் நிலம் எனும் பிரம்மாண்ட திரைப்படத்தை காணும் வாய்ப்பு அனைவருக்கும் கிட்டவுள்ளது.
ஐபிசி தமிழின் முற்றுமுழுதான தயாரிப்பில், ஐபிசி தமிழின் குறுந்திரை போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்று இயக்குனர் ஆனந்தரமணன் இயக்கிய முழுநீளத் திரைப்படமாக ஆறாம் நிலம் திகழ்கிறது.
ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும், துயரங்களையும் எடுத்துவரும் ஆறாம் நிலம் திரைப்படம் எதிர்வரும் 24ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு ஐபிசி தமிழ் யூடியூப்பில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.