ஓய்வுபெற்ற படையினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஜனாதிபதி நடவடிக்கை - செய்திகளின் தொகுப்பு
ஓய்வுபெற்ற முப்படை வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார்.
பத்தரமுல்லை, அகுரேகொட இராணுவத் தலைமையகத்தின் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நலனுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள "முன்னோடிகளின் இல்லம்" திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் இதுவரை பொருத்தமான வேலைத்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக இராணுவத்தினர் ஓய்வு பெற்ற பின்னர் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்ள நேரிட்டுள்ளது எனவே அதனைக் கருத்திற் கொண்டு, ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கான சிறப்பு செயற்திட்டம் ஒன்றை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு மற்றும் ரணவிரு சேவை அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam