ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல்: பொது வேட்பாளராக ரணில்!
அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டை அரசாங்கம் செய்து வருகின்றது என அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காரணத்தினாலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் ஒத்திப்போடுவதற்குத் தயாராகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஓரிரு மாதங்களுக்கு முன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன மற்றும்ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஆகிய மூவரும் ஒன்றிணைந்து இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
மொட்டுக் கட்சியின் ஆதரவு
ரணில் விக்ரமசிங்கவைப் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு மொட்டுக் கட்சியின் ஆதரவைப் பசிலிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ரணிலைப் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு பசில் ராஜபக்ச பச்சைக்கொடி
காட்டியிருந்தார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
