தமிழ்ப் பொது வேட்பாளர் முட்டாள் தனமான முடிவு! சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு

Sri Lankan Tamils M A Sumanthiran P Ariyanethran Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Benat Aug 18, 2024 02:03 PM GMT
Report

ஜனாதிபதி தேர்தலில்  தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது போன்ற ஒரு  முட்டாள் தனமான செயற்பாடு வேறு எதுவுமில்லை என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்(M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார். 

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

வாகன இறக்குமதியில் தாமதம்! சடுதியாக அதிகரித்துள்ள விலைகள்

வாகன இறக்குமதியில் தாமதம்! சடுதியாக அதிகரித்துள்ள விலைகள்

தமிழ் மக்களுக்கு பாதகமான விளைவு

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரைக் களமிறக்குவது அநாவசியமானது மாத்திரமல்ல, இது தமிழ் மக்களுக்கு மிகப் பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்பதையும் நான் தொடர்ச்சியாக கூறிவருகின்றேன்.

தமிழ்ப் பொது வேட்பாளர் முட்டாள் தனமான முடிவு! சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு | Presidential Election Common Tamil Candidate

தற்போதைய கள நிலவரத்தை ஒத்த சூழ்நிலையில்தான் நாம் எமது மக்களின் வாக்குப் பலத்தைப் பிரயோகித்து அடையப்படவேண்டிய விடயங்களை அடைந்து கொள்ள வேண்டும்.

ஆயுதம் இல்லாத தற்போதைய சூழலில் வாக்குப்பலம் தான் எம்முடைய ஆயுதம். அதனைத் தகுந்த சமயத்தில் பயன்படுத்தாமல் எங்கேயோ கொண்டுசென்று ஒளித்து வைப்பதை ஒத்ததாகவே தமிழ்ப் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் செயற்பாடு இருக்கின்றது.

இதனைவிட முட்டாள்தனமான செயற்பாடு வேறு எதுவுமில்லை. பிரதான தமிழ் அரசியல் கட்சியான நாம் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றோம். அவ்வாறிருக்கையில் எமது கட்சியை உள்ளடக்காத தரப்பினர் இணைந்து தமிழ் பொதுக்கட்டமைப்பு எனத் தம்மைத்தாமே அடையாளப்படுத்தி அவர்கள் மத்தியில் பொது வேட்பாளர் ஒருவரை பொதுவேட்பாளராக நிறுத்துவது முற்றிலும் கேலிக் கூத்தான விடயமாகும்.

இது வெறும் கேலிக்கூத்து என்றால் நாமும் பார்த்து சிரித்துவிட்டு இருக்கலாம். ஆனால் இது அவ்வாறான விடயம் அல்ல. மாறாக 75 வருடகாலமாக தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்ற எமது மக்களின் அபிலாஷைகளை முற்று முழுதாகக் குழிதோண்டிப் புதைக்கின்ற செயலாகும்.

அரிநேத்திரன் ஏன் களமிறங்கினார்...

ஆகையினாலேயே நான் இதனைக் கடுமையாக எதிர்க்கின்றேன். எமது மக்களும் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ன நோகத்திற்காக களமிறக்கப்படுகின்றார் என யாருக்கும் தெரியவில்லை. அண்மையில் நேர்காணலொன்றில் பங்கேற்ற அரியநேத்திரன், அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன உள்ளடங்கப் போகின்றது எனத் தனக்குத் தெரியாது என்கின்றார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் முட்டாள் தனமான முடிவு! சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு | Presidential Election Common Tamil Candidate  

அவ்வாறெனில் அவர் எதற்கான பொது வேட்பாளராகக் களமிறங்கினார்? சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அரசியல் தீர்வென மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.

அவ்வாறிருக்கையில் இவ்வாறு பொது வேட்பாளரைக் களமிறக்கி, அவர் குறைந்த அளவிலான வாக்குகளைப் பெறும்போது, தமிழ் மக்களே மேற்குறிப்பிட்ட தீர்வை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கருத்து முன்வைக்கப்படும்.

இது ஒரு விஷப் பரீட்சை என எமது கட்சியின் தலைவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் என்னைப் பொறுத்தமட்டில் இது பரீட்சையே அல்ல. தோல்வியடையப் போவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு மேற்கொள்ளும் முட்டாள் தனமான நகர்வே இதுவாகும்.

அதேவேளை, பொது வேட்பாளர் எமது கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

அதற்கமைய இது குறித்து அவரிடம் விளக்கம் கோரப்பட்டிருக்கின்றது. அதேபோன்று கட்சியின் எந்தவொரு சுட்டத்திலும் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் தீவிர முயற்சியில் ரணில் அரசாங்கம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் தீவிர முயற்சியில் ரணில் அரசாங்கம்

வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகப் போகும் நபர்! வெளியாகியுள்ள எதிர்வுகூறல்

வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகப் போகும் நபர்! வெளியாகியுள்ள எதிர்வுகூறல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US