வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகப் போகும் நபர்! வெளியாகியுள்ள எதிர்வுகூறல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரலாற்றில் மிகவும் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற ஜனாதிபதியாவார் என்று முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன(Dr Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.
நான் முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் ஆரம்பத்தில் கூறிய கணிப்பீடுகள் தற்போது சரியாகியிருக்கின்றன. எனவே எனது இந்தக் கணிப்பீடும் பிழையாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணிலுடன் இணையவுள்ள பலர்
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு எதிர்வுகூறியுள்ளார்.

மேலும், எதிர்க்கட்சியில் இருந்து மேலும் பல பிரபலங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன்(Ranil Wickremesinghe) இணைந்து கொள்ளவுள்ளனர். இன்னும் பலர் வரவிருக்கின்றனர்.
ரணிலுக்கு அடிபணிவேன்..
அவர்கள் தற்போது பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். விரைவில் அவர்கள் இணைந்து கொள்வார்கள் என்றும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, எனது அரசியலில் ஒருபோதும் நான் கட்சித் தலைவர்களிடம் சிறைபட்டிருக்கவில்லை. நான் ஒரு போதும் கட்சித் தலைவர்களுக்கு அடிபணியவும் மாட்டேன்.
அடிபணிவதாக இருந்தால் இன்றிருக்கும் ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மாத்திரம்தான் எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri