தேசிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி: மனோ - ஹக்கீம் ஆதரவு!
"தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைப்பார்" என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போதே, தேசிய அரசாங்கத்திற்கான அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியிடம் கோரிக்கை
மேலும், "எதிர்வரும் 25ஆம் திகதி சர்வதேச நாணய நிதியம் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் சமர்ப்பிப்பார். அதன் பின்னர் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவைக் கோருவார்.
அன்றைய தினம் நானும் ரவூப் ஹக்கீமும் தேசிய அரசாங்கம் அமைக்க ஆதரவு
வழங்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri
