ஆசிரியர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிடும் தகவல்
இலங்கை அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கணிசமான எண்ணிக்கையிலான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் தடுப்பூசி திட்டம், அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு வாரத்திற்குள் செலுத்தி முடிக்கப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியை செலுத்திய பின்னர் ஆசிரியர்கள் மிகவும் பாதுகாப்பாக உணருவார்கள், மேலும் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை நம்பிக்கையுடன் பாடசாலைக்கு அனுப்ப முடியும் என்று அமைச்சர் கூறினார்.
இதன் பின்னர் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார நிபுணர்களிடமிருந்து பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்குவது மிக முக்கியமானதாக அமையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
