நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு
நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கடந்த வெசாக் பௌர்ணமி தினமன்று வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளி ஒருவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்கு தீர்ப்புக்களை வழங்கியுள்ள நிலையில் அந்த தீர்ப்புக்களிலிருந்து கற்றுக்கொள்ளவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அனுராதபுரம் மேல் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் குற்றவாளி என தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் 386ம் இலக்க சரத்தின் பிரகாரம் தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபருக்கு எதிராக மேலும் 20க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
