குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைப்பு

Urban Council All Island Social Development Society Anura Kumara Dissanayaka Sri Lanka Northern Province of Sri Lanka
By Thevanthan Apr 22, 2026 12:50 PM GMT
Report

குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் விசேட பங்கேற்புடன் நடைபெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும்  இந்நிகழ்வானது, இன்று (22.04.2026) இடம்பெற்றுள்ளது. 

தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமே காண்பிக்கின்றதாக என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இந்நிகழ்வின் போது தெரிவித்தார்.

சிங்களவர்களை நோக்கி நீட்டப்படும் கரம்.. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்தாரி தொடர்பில் கம்மன்பிலவின் பரப்புரை

சிங்களவர்களை நோக்கி நீட்டப்படும் கரம்.. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்தாரி தொடர்பில் கம்மன்பிலவின் பரப்புரை

இறங்குதுறையின் புனரமைப்பு

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மாகாணத்திலுள்ள கடல் கடந்த தீவுகளுக்குரிய பிரதான போக்குவரத்து மார்க்கமாகவுள்ள குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இது எமது மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும் நன்னாளாக அமைகின்றது. குறிப்பாக, நெடுந்தீவைச் சேர்ந்தவர்கள் இந்த இறங்குதுறையில் தமது படகுகளை நிறுத்தி வைப்பதில் பெரும் இடர்களை எதிர்கொண்டிருந்த நிலையில், அதற்கான நிரந்தரத் தீர்வும் தற்போது எட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார். 

குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைப்பு | President Working With Development Island Region

மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், தீவகப் பகுதியின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது. இப்பகுதிகளின் வீதிப் புனரமைப்புப் பணிகளுக்கும் அதீத முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது.

 இதனையடுத்து இப்போது இந்த இறங்குதுறை புனரமைக்கப்பானது எதிர்காலத்தில் நெடுந்தீவு இறங்குதுறையையும் புனரமைப்பதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. இந்த இறங்குதுறையானது 984 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்திலேயே புனரமைக்கப்படவுள்ளது.

கடந்த காலங்களில் இவ்வளவு பெரிய தொகையிலான அபிவிருத்தித் திட்டங்கள் வெளிநாட்டுக் கடன்கள் அல்லது உதவிகள் ஊடாகவே செய்யப்பட்டன. ஆனால், தற்போது இலங்கை அரசாங்கத்தின் சொந்த நிதியில், அதாவது மக்களின் வரிப்பணத்தில் இவை முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த அபிவிருத்தித் திட்டம் தீவக மக்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த வரப்பிரசாதமாகும். இதற்காக உழைத்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கும்,  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் தனது  நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.  

குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைப்பு | President Working With Development Island Region

பலரின் பங்கேற்பு 

இந்த அரசாங்கத்தின் ஊடாக வடக்கு மாகாணத்தில் துரித கதியில் அபிவிருத்திகள் நடைபெறுவது சிலருக்குப் பிடிப்பதில்லை. எப்படியாவது தேவையற்ற கருத்துகளைக் கூறி குழப்பங்களை ஏற்படுத்தவே அவர்கள் முயற்சிக்கின்றனர்.

உண்மையில், அபிவிருத்தித் திட்டங்களின் தாமதத்துக்கு அரசாங்கம் காரணமல்ல. ஒரு சில அரச திணைக்களங்கள்தான் அதற்குக் காரணமாகின்றன.

குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைப்பு | President Working With Development Island Region

அவர்கள் தங்களைத் திருத்திக்கொண்டு, அரசாங்கத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்துச் செயற்பட முன்வர வேண்டும், என ஆளுநர் குறிப்பிட்டதுடன் இந்தக் குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு (2027) ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைப்பு | President Working With Development Island Region

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை அறிந்தும் மௌனம் காக்கும் அரசாங்கம்.. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை அறிந்தும் மௌனம் காக்கும் அரசாங்கம்.. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை : மக்கள் விசனம்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை : மக்கள் விசனம்

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US