ராகம "ரணவிரு செவன"வுக்கு ஜனாதிபதி விஜயம் : சிகிச்சை பெறும் படையினரிடம் நலம் விசாரிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ராகமவில் அமைந்துள்ள “ரணவிரு செவன” நலன்புரி மையத்துக்கு விஜயம் செய்து, அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்புப் படையினரின் நலம் குறித்து விசாரித்துள்ளார்.
குறித்த விஜயமானது நேற்று(19.05.2026) முற்பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரணவிரு செவன நிலையம்
இங்கு பாதுகாப்புப் படையினர்களுடன் சுமுகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி, தாய்நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக அவர்கள் அனைவரும் செய்த அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, “ரணவிரு செவன” நிலையத்தில் பணியாற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுடனும் கலந்துரையாடிய ஜனாதிபதி, சிகிச்சை பெற்று வரும் படையினருக்கு மேலும் வழங்கக்கூடிய மருத்துவ மற்றும் ஏனைய வசதிகள் குறித்தும் ஆராய்ந்துள்ளார்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்றிகோ, இராணுவ சேவைகள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.ஜி.எல்.கே. வீரகோன், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் செனரத் கொஹொன உள்ளிட்ட பலர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டள்ளனர்.




டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
வீட்டுப் பத்திரம் தர மீனாவிற்கு செக் வைத்த சிந்தாமணி, என்ன செய்யப்போகிறார்?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam