ஜனாதிபதி செயலகத்தின் கடிதத் தலைப்புக்களை பயன்படுத்துவது தொடர்பில் அறிவிப்பு
ஜனாதிபதி செயலகம், தமது கடிதத் தலைப்புக்களைப் பயன்படுத்துவது தொடர்பில் கடுமையான அறிவுறுத்தல்களை வகுத்து சுற்றறிக்கை ஒன்றை விரைவில் வெளியிட உள்ளது.
அதன்படி, கடிதத் தலைப்புக்கள் அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் தனிப்பட்ட வணிகத்தை நடத்துவதற்கு அல்லது தனிப்பட்ட உதவிகளைக் கோருவதற்கு மற்றும் விசா பரிந்துரைகளை வழங்கச் செயலகத்தின் கடிதத் தலைப்புக்களைப் பயன்படுத்துவது கண்டிப்பாகத் தடைசெய்யப்படும்.

கடிதத் தலைப்புகள்
ஜனாதிபதி செயலக ஊழியர்களாக இல்லாத சிலர் கூட பயன்படுத்துவதாகக் கூறப்படும் கடிதத் தலைப்புகள் தொடர்பில், ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்தே இந்த சுற்றறிக்கையை வெளியிடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 15 மணி நேரம் முன்
தன்னைப்போல் வெளியே அனுப்பப்பட்ட மீனா, நக்கலாக ரோஹினி சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan