ஜனாதிபதியின் வடக்கு மாகாண விஜயத்திற்கான முன்னாயத்த கலந்துரையாடல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வடக்கு மாகாணத்திற்கான விஜயம் தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, இன்று (19/05/2024) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, ஜனாதிபதியால் வடக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கு பொறுப்பான துறைசார் அதிகாரிகளின் கடமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
விசேட திட்டங்கள்
மேலும், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் திட்டமிடல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P. S. M. Charles) மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) மற்றும் பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam