ஜனாதிபதியின் வடக்கு மாகாண விஜயத்திற்கான முன்னாயத்த கலந்துரையாடல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வடக்கு மாகாணத்திற்கான விஜயம் தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, இன்று (19/05/2024) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, ஜனாதிபதியால் வடக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கு பொறுப்பான துறைசார் அதிகாரிகளின் கடமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
விசேட திட்டங்கள்
மேலும், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் திட்டமிடல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P. S. M. Charles) மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) மற்றும் பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 7 மணி நேரம் முன்

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri
