புதிய இடத்துக்கு மாற்றப்படும் ஜனாதிபதி நிதிய அலுவலகம்
ஜனாதிபதி நிதியம் 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் புதிய வளாகத்திற்கு மாற்றப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.
இதன்படி, தற்போது,கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள லேக் ஹவுஸ் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தற்போது அமைந்துள்ள ஜனாதிபதி நிதியம், ஜனாதிபதி மாவத்தையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு எதிரே உள்ள கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஸ்டோண்டர்ட் சார்ட்டர் கட்டிடத்தின் தரை தளத்திற்கு மாற்றப்படுகிறது
எனவே, 2025 ஜனவரி முதலாம் திகதி முதல், ஜனாதிபதி நிதியிலிருந்து சேவைகளை நாடும் பொதுமக்கள் புதிய அலுவலகத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிக பயன்
முன்னதாக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முன்னாள் அரசாங்க அரசியல்வாதிகள் அதிக பயன்பெற்றமை குறித்து தகவல்கள் வெளியாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam