மகிந்த கட்சியை கைவிடுமாறு ரணிலிடம் கோரிக்கை விடுத்த முன்னாள் அமைச்சரின் மகன்
அண்மையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ராஜித சேனாரத்னவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் அவரது மகன் சத்துர சேனாரத்னவும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .
ராஜித சேனாரத்ன சுகயீனம் காரணமாக நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.
சமகால அரசியல்
நலம் விசாரித்துவிட்டு, அரசியல் தகவல்கள் மற்றும் கட்சிகள் தொடர்பிலும் கருத்து பரிமாற்றிக் கொண்டுள்ளனர்.
இதன் போது, பொதுஜன பெரமுன கட்சியுடனான பயணத்தை விரைவில் நிறுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் சத்துர சேனாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
