நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்த ஜனாதிபதி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வாயிலில் ஜனாதிபதியைச் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன , இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், நாலக கொடஹேவா, காஞ்சன விஜேசேகர, அனுந்திக பெர்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இசுரு தொடங்கொட ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
ஜனாதிபதி சபைக்குள் நுழையும் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பப்படட நிலையில் அதற்கு மஹிந்தானந்த அழுத்கமகே, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோர் பதிலளித்துள்ளனர்.
இலங்கையில் தொடர்ந்தும் உரப் பிரச்சினை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அது தொடர்பான விவாதங்கள் இன்றைய தினம் நடத்தப்படுகின்றது.
இந்த நிலையிலேயே ஜனாதிபதி இன்றைய தினம் நாடாளுமன்றம் சென்றுள்ளார்.


50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri