நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Dinesh Gunawardena Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples
By Sivaa Mayuri Nov 06, 2022 11:32 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன நல்லிணக்கத்திற்கான பன்முனை வேலைத்திட்டத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களை ஒன்றிணைக்க நாடாளுமன்றக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதில்  பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நீதி, சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் செயற்படவுள்ளனர்.

இந்தக்குழு ஒவ்வொரு திங்கட்கிழமையும், வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு உடனடியாகச் சந்திக்கவுள்ளது. தமது பணிகளை விரைவாக முடிக்கும் வகையில் இந்த சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் தனிப் பிரிவு

நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க! | President Gives Priority Ethnic Reconciliation

இந்த குழு எதிர்வரும் வாரங்களில் நல்லிணக்க முயற்சிகளுடன் தொடர்புடைய முக்கிய கூறுகளை குழு ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்கீழ் ஜனாதிபதி செயலகத்தில் தனிப் பிரிவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக இருந்த அரச துறை அதிகாரியான லெட்சுமன்னன் இளங்கோவன் இதற்கு தலைமை தாங்குகிறார். அத்துடன் இந்த பிரிவுக்கு கூடுதல் செயலாளராகவும் பணியாற்றுகிறார். வவுனியாவில் அவரது அலுவலகம் அமைக்கப்படும்.

அமைச்சர் குழுவினர் பொதுமக்களிடம் இருந்து அவ்வப்போது கருத்துகளைப் பெறுவதற்காகவே இந்த அலுவலகம் அமைக்கப்படுகிறது.

முன்னதாக ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இன நல்லிணக்கம் தொடர்பான விடயங்களை கலந்துரையாட ஒரு கூட்டத்தை நடத்துமாறு கோரி ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு கடிதம் எழுதிய போது இந்த முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த முயற்சிகளின் ஒரு கட்டமாக பொறுப்புக்கூறல் என்ற அடிப்படையில்  தென்னாபிரிக்காவின் மாதிரியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மறைந்த மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக இருந்த போது, இவ்வாறானதொரு அமைப்பு முதலில் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டது.

உண்மையில், அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க ஒரு வரைவுச் சட்டத்தின் அடிப்படையை உருவாக்குவதற்கான ஒரு கருத்துருவை உருவாக்கினார்.

இந்தநிலையில் வெளிவிவகார அமைச்சர் சப்ரி இப்போது மீண்டும் அதே கொள்கையை ஜனாதிபதி விக்ரமசிங்கவின் ஒப்புதலுடன் பின்பற்றி வருகிறார்.

எனினும் பிரிவினைவாதப் போரின் இறுதிக்கட்டத்தின் போது முக்கிய பதவிகளை வகித்த சில இராணுவ உயர் அதிகாரிகள் மத்தியில் அவநம்பிக்கைiய ஏற்படுத்தாத வகையில் இந்த விடயத்தை கையாளுவது அவசியம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US