றீ(ஷ்)சா ஒருங்கிணைந்த பண்ணைக்கு ஜனாதிபதி விருது
கொழும்பில் (Colombo) நடைபெற்ற சுற்றுப்புறச் சூழலுக்கான ஜனாதிபதி விருதுகள் வழங்கும் நிகழ்வில் (President Environment Awards - 2024) றீ(ஷ்)சா ஒருங்கிணைந்த பண்ணை வெண்கல விருதை (Bronze Award) வென்றுள்ளது.
குறித்த விருது வழங்கும் நிகழ்வானது நேற்றைய தினம் (29.06.2024) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 11ஆவது முறையாக இடம்பெற்றுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையால் (Central Environmental Authority) நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
வெற்றிக்காக உழைத்தவர்கள்
இதேவேளை, அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் இந்த வைபவத்தில் விருதுகளைப் பெற்றுக் கொண்டன.

மேலும், இந்த வெற்றிக்காக உழைத்த றீ(ஷ்)சா நிறுவனத்தின் இயக்குனர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இதன்போது நன்றியுடன் நினைவு கூரப்பட்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam