ரணில் - அநுரவின் நெருக்கமான உறவு - மகிந்த வெளியிட்ட பரபரப்பு தகவல்
ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்கவுக்கும் அநுரகுமார திசாநாயக்வுக்கும் இடையில் இரகசிய உட்பாடு உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
அதற்கமையவே அண்மையகால செயற்பாடுகள் இடம்பெறுவதாக, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் மகிந்த தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தியினால் இந்த நாட்டில் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் மனநிலை
செம்மறி ஆட்டுத்தோல் அணிந்து வரும் குழுக்களால் மக்கள் ஏமாற மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேசிய மக்கள் கட்சி நாடு முழுவதும் அலுவலகங்களை அமைத்தாலும் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது.
அலுவலகங்களைத் தவிர மக்களின் வாக்குகளால் தேசிய மக்கள் சக்தி கட்சியினால் தேர்தலில் வெற்றிபெற முடியாது என மகிந்த கூறியுள்ளார்.
மகிந்தவின் குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாடு அநாதரவாகிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவால் நாட்டை ஆள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Optical Illusion:'325' மற்றும் '235' என்ற இலக்கங்களுக்கிடையில் இருக்கும் வித்தியாச எண் என்ன? Manithan

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam
