ஜனாதிபதியால் முப்படையினர் அழைக்கப்பட்டமை குறித்து விளக்கம்
பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே முப்படையினரை வரவழைத்து ஜனாதிபதியினால் அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்சல் சம்பத் துயகொண்டா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இது வழமையான நடைமுறையாகும்.
வர்த்தமானி
அவசரகாலச் சட்டம் இல்லாவிட்டாலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முப்படையினரை வரவழைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

இது முற்றிலும் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் வழமையான வர்த்தமானியாகும். இருப்பினும் சமூக வலைதளங்களில் இது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கைக்கு ஏற்படக்கூடிய அனைத்து வகையான அச்சுறுத்தல்களும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சம்பத் துயகொண்டா, பொதுமக்கள் தற்போது பல வழக்கத்திற்கு மாறான அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri