நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர
பொதுத் தேர்தலில் மகத்தான தேர்தல் வெற்றிக்காக வாக்களித்த நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.
“மறுமலர்ச்சி சகாப்தத்தை ஆரம்பிப்பதற்கான பொறுப்பை சுமந்த அனைவருக்கும் நன்றி!” என ஜனாதிபதி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி புதிய நாடாளுமன்றத்தை அமைக்கவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில், தேசிய பட்டியல் ஊடாக 18 ஆசனங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறுதிப் பெரும்பான்மை
நாடாளுமன்றத்தை சுத்தம் செய்து புதியவர்களை நாடாளுமன்றம் கொண்டு செல்வது தேசிய மக்கள் சக்தியின் கடமை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri