ஜனாதிபதியின் ஜெர்மனிக்கான விஜயம் குறித்து பரப்பப்படும் செய்திகள்.. நீதிமன்று பிறப்பித்த உத்தரவு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜெர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப முயன்றதாகக் கூறப்படுவோர் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனை குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இன்று கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்கவிடம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் கூடுதல் செயலாளர் ஜி. சுபாஸ், சமிந்த ரோசன் இது தொடர்பான முறைப்பாட்டை செய்திருந்தார்.
அவமதிப்பு
ஜனாதிபதி தனது ஜெர்மன் சுற்றுப்பயணத்தின் போது முன்னாள் விடுதலைப் புலிகள் தலைவரை சந்தித்ததாகக் கூறப்படும் பொய்யான கூற்றை, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஒரு ஊடக சந்திப்பின் போது பகிரங்கமாகக் கூறினார்.
பின்னர் இந்த அறிக்கை பல்வேறு ஊடகங்கள் மற்றும் இணையம் முழுவதும் பரவலாகப் பரப்பப்பட்டது.
இந்தநிலையில், குறித்த விடயம், ஜனாதிபதியை அவமதிக்கும் மற்றும் அரசாங்கத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கூறப்பட்டதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சமர்ப்பிப்புகளை மதிப்பாய்வு செய்த பின்னர், விசாரணையின் முன்னேற்றத்தை தாமதமின்றி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பிரதம நீதவான் உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri
