ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் வெளிப்படையான கலந்துரையாடல்கள், உண்மைகளை எதிர்கொள்ளவும், பொறுப்புணர்வு கலாசாரத்தை வளர்க்கவும் அவர் காட்டும் விருப்பத்தைக் குறிப்பதாக இன்றைய முன்னணி ஆங்கில செய்தித்தாள் கூறுகிறது.
இருப்பினும், அரசாங்க வாக்குறுதிகளுக்கும் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க இந்த நடவடிக்கைகள் போதுமானதா என்பதைப் பார்க்க வேண்டும் என்று அந்த செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
நுண் முகாமைத்துவம்
பல அமைச்சகங்களின் பணிகளை அவர் எவ்வாறு தனிப்பட்ட முறையில் நுண் முகாமைத்துவம் செய்கிறார் என்பதற்கான ஒரு மாதிரியை இந்த வாரத்தில் நாடு கண்டது.

இந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்னும் பிரபலமாக இருக்கிறார். ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பெரும்பான்மையானவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவருக்கு அதிக நேரம் தேவை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
எனினும், அவரது குழுவினரின் செயற்பாடுகள் குறைவாகவே காணப்படுவதாலும், அவர்கள் அதிகம் கேட்கப்படாததாலும், அவர் ஒரு தனித்துவமான மையமாக மாறிவிட்டார் என்று செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam