ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் வெளிப்படையான கலந்துரையாடல்கள், உண்மைகளை எதிர்கொள்ளவும், பொறுப்புணர்வு கலாசாரத்தை வளர்க்கவும் அவர் காட்டும் விருப்பத்தைக் குறிப்பதாக இன்றைய முன்னணி ஆங்கில செய்தித்தாள் கூறுகிறது.
இருப்பினும், அரசாங்க வாக்குறுதிகளுக்கும் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க இந்த நடவடிக்கைகள் போதுமானதா என்பதைப் பார்க்க வேண்டும் என்று அந்த செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
நுண் முகாமைத்துவம்
பல அமைச்சகங்களின் பணிகளை அவர் எவ்வாறு தனிப்பட்ட முறையில் நுண் முகாமைத்துவம் செய்கிறார் என்பதற்கான ஒரு மாதிரியை இந்த வாரத்தில் நாடு கண்டது.

இந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்னும் பிரபலமாக இருக்கிறார். ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பெரும்பான்மையானவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவருக்கு அதிக நேரம் தேவை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
எனினும், அவரது குழுவினரின் செயற்பாடுகள் குறைவாகவே காணப்படுவதாலும், அவர்கள் அதிகம் கேட்கப்படாததாலும், அவர் ஒரு தனித்துவமான மையமாக மாறிவிட்டார் என்று செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri