மரண சான்றிதழ் வழங்க விழா எடுக்கும் அரசு:கவலை தெரிவிக்கும் முன்னாள் எம்.பி
'டிட்வா' பேரிடரில் மரணமடைந்தவர்களுக்கான சான்றிதழ் வழங்குவதற்கு அரசாங்கம் விழா எடுக்கப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார். தனது வீட்டில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
வாக்குகளுக்கு அரசியல் செய்யும் அரசு
மரண சான்றிதழை பெற்றுக் கொள்பவர்கள், அதை சமர்ப்பித்து 50 ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொள்ளலாம்.அதனால்,மரணச் சான்றிதழ் வழங்குவதற்கும் பெரும் விழா எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதை நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு கவலையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அது மட்டுமல்ல இலவசமாக வழங்கப்படும் உணவு பார்சல்களுக்கும் கூப்பன் வழங்கப்படுகிறது.

அதை வைத்துத் தான் உணவு பார்சல்களை பெற்றுக் கொள்ள வேண்டும். மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்பவர்கள் உங்களுக்கு வாக்களிக்கலாம்.ஆனால் அவரின் இழப்பு 50 ஆயிரம் ரூபாவில் ஈடுசெய்ய முடியாது.
இந்த அரசாங்கத்தின் சிந்தனைகள் மிகவும் கீழ்தரமானதாகவே இருக்கிறது.அவ்வாறு செய்ய வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri