கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.பி! நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தகவல்
கைது செய்யப்பட்ட முன்னாள் இரத்தினபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர, இன்று (22) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கியைக் காட்டி ஒருவரை மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பிரேமலால் ஜெயசேகர நேற்று(21) நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகத்தின் பேரில் கைது
குடும்ப உறுப்பினர்களுடன் நுவரெலியாவுக்கு வந்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும், அவிசாவெல்லாவிலிருந்து சுற்றுலா வந்திருந்த ஒரு குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நிலைமை மோசமடைந்ததாகவும், அப்போது சந்தேக நபர் தனது கைவசம் இருந்த கைத்துப்பாக்கியைக் காட்டி குழுவினரை மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
சந்தேக நபரிடம் இருந்த துப்பாக்கியானது, பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்டு, 2025-ல் காலாவதியாகிவிட்ட உரிமத்தின் கீழ் வழங்கப்பட்டது என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan