இலங்கையில் முதல் முறையாக கோவிட் தொற்றால் கர்ப்பிணி பெண் மரணம்
கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.
அதற்கமைய இலங்கையில் இதுவரையில் 720 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் தரவுகள் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் முதல் முறையாக கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர், ராகம, பட்டுவத்தை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரே உயிரிழந்துள்ளாார் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை இந்த மரணம் பதிவாகியுள்ளதாக பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.